உள்ளூர் செய்திகள்

நாகை மாலி எம்.எல்.ஏ பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

Published On 2022-08-11 10:39 GMT   |   Update On 2022-08-11 10:39 GMT
  • மக்கள் தொடர்பு முகாமில் 54 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ‌
  • முகாமில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை நகல் தொடர்பான மனுக்கள் அளிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் தண்ணிலப்பாடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 54 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ‌

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்சங்கர் தலைமையில் நடை பெற்ற முகாமில் வருவாய்த்துறை சார்பில் 31 பயனாளிகளுக்கும், வேளாண்மை துறை சார்பில் 18 பயனாளிகளுக்கும், தோட்டக்கலை துறை சார்பில் 5 பயனாளிகள் என மொத்தம் 54 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.முகாமில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை நகல் தொடர்பான மனுக்கள் அளிக்கப்பட்டது.

முகாமில் நாகை மாலி எம்.எல்.ஏ, வேளாண்மை இணை இயக்குனர் ஜாக்குலா அகண்டராவ், வருவாய் வட்டாட்சியர் ரமேஷ் குமார், வருவாய் ஆய்வாளர் தேவேந்திரன், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்பாலசுப்பி ரமணியன், துணை வேளா ண்மைஅலுவலர் ரெங்கநாதன், தண்ணி லப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் செல்வேந்திரன் உள்ளிட்ட பலர் உடனி ருந்தனர்.

Tags:    

Similar News