உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவன ஊழியர் சாவு

Published On 2023-04-23 09:27 GMT   |   Update On 2023-04-23 09:27 GMT
  • அவருக்கு மது குடிக்கும் பழக்கம் அதிகமானது.
  • தேவன் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அருகே உள்ள ஜடையம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தேவன் (வயது47). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி வனிதா. இவர் மொரப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தேவனின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த மன வேதனையில் தேவன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதில் அவருக்கு மது குடிக்கும் பழக்கம் அதிகமானது.

கடந்த சில நாட்களுக்கு முன் இவருடைய தாயார் இறந்து 5 மாதம் முடிந்த நிலையில் ஆற்றங்கரையில் துணி வைத்து படைத்து காரிய சடங்கு செய்தனர்.

இதனையடுத்து வீட்டிற்கு சென்ற தேவனுக்கும், வனிதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மன வேதனையடைந்த தேவன் தன் சொந்த ஊரான ஜடையம்பட்டிக்கு வந்தார். அங்கு வீட்டின் உள்ளே சென்றவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.

சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தேவன் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்.

உடனே இவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் மனைக்கு எடுத்து சேர்த்தனர். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News