உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் நாளை மின் நிறுத்தம்

Published On 2023-03-17 09:41 GMT   |   Update On 2023-03-17 09:41 GMT
  • தஞ்சை மணிமண்டபம் பகுதியில் நாளை மின்கம்பங்கள் மாற்றும் பணி நடக்க உள்ளது.
  • இதனால் பலஇடங்களில் காலை9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

தஞ்சாவூர்:

தஞ்சை மணிமண்டபம் பகுதியில் நாளை (சனிக் கிழமை) நெடுஞ்சாலை துறையால் சாலை விரிவாக்க பணிக்காக மின்கம்பங்கள் மாற்றும் பணி நடக்க உள்ளது.

இதனால் மணிமண்டபம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் அண்ணாநகர், பர்மாகாலனி , சாந்தி நகர், ராஜராஜன் நகர், சித்ரா நகர், நாஞ்சிக்கோட்டை ரோடு, பாத்திமா நகர், முனியாண்டவர் காலனி, சிட்கோ, மேரீஸ்கார்னர், பூக்காரத் தெரு, கல்லுக்குளம், அன்பு நகர், ஜெகநாதன் நகர், கோரிகுளம், துளசிராமன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் காலை9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

மேற்கண்ட தகவலை தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News