உள்ளூர் செய்திகள்

பொன்னேரியில் பாதை நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்றாமல் சாலை அமைத்த ஊழியர்கள்- வாகன ஓட்டிகள் அச்சம்

Published On 2023-03-03 11:42 GMT   |   Update On 2023-03-03 11:42 GMT
  • 27 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • பணிகள் முடிக்கப்பட்ட தெருக்களில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

பொன்னேரி:

பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகள் முடிக்கப்பட்ட தெருக்களில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் 15-வது வார்டு காளிகாம்பாள் தெருவில் பாதை நடுவே மின்கம்பம் உள்ளது. இதனை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் ஏற்கனவே வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே சாலை நடுவே இருந்த மின்கம்பத்தை அகற்றாமல் நகராட்சி நிர்வாகம் புதிய சாலை அமைத்து உள்ளது.

இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர்.

இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும்போது சாலை நடுவே உள்ள மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

எனவே வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் சாலை நடுவே உள்ள மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News