உள்ளூர் செய்திகள்

குடியரசு தின விழாவையொட்டி ெரயில் நிலையத்தில் போலீசார் சோதனை

Published On 2023-01-25 09:17 GMT   |   Update On 2023-01-25 09:17 GMT
  • நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை (26-ந் தேதி) கொண்டாடப்படுகிறது.
  • இதையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களான ெரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள், சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சேலம்:

நாடு முழுவதும் குடியரசு தின விழா நாளை (26-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களான ெரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், அரசு அலுவலகங்கள், சுற்றுலாத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சேலம் ெரயில் நிலையத்தில் ெரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலும், ெரயில்வே பாதுகாப்புப் படை (ஆா்.பி.எப்.) ஆய்வாளா் தலைமையிலான போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

சேலம் வழியாக டெல்லி, மும்பை உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு செல்லும் ெரயில்களிலும், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பிற நகரங்களுக்கு செல்லும் ெரயில்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரெயில் நிலையங்களில் பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டா் மூலம் போலீசார் சோதனையிட்டு வருகின்றனா். இதுதவிர இருசக்கர வாகனம், காா் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருகிற 27-ந்தேதி வரை தொடா்ந்து கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Tags:    

Similar News