உள்ளூர் செய்திகள்

கல்லூரிக்கு சென்ற மாணவி மாயம்

Published On 2022-06-10 06:48 GMT   |   Update On 2022-06-10 06:48 GMT
  • கல்லூரிக்கு சென்ற மாணவி மாயமானார்.
  • கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, திருவிளக்குறிச்சி ராஜாமலை வடக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சங்கீதா (வயது 18). இவர் திருச்சி மாவட்டம், குமுளூரில் உள்ள கல்லூரியில் பி.எஸ்.சி. கணினி அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த 4-ந் தேதி காலையில் வழக்கம் போல் சங்கீதா கல்லூரிக்கு சென்றார். பின்னர் மாலையில் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் எங்கும் தேடியும் சங்கீதாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து சங்கர் இது தொடர்பாக பாடாலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான சங்கீதாவை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News