உள்ளூர் செய்திகள்

காரில் மர்மமாக இறந்து கிடந்த தனியார் நிறுவன மேலாளர்

Published On 2023-08-31 06:10 GMT   |   Update On 2023-08-31 06:10 GMT
  • கீழபுலியூர் கிராமத்தில் நின்று கொண்டிருந்த காரில் மர்மமான முறையில் தனியார் நிறுவன மேலாளர் இறந்து கிடந்தார்
  • உடலை கைப்பற்றி மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

அகரம்சீகூர்,

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம்சீகூர் அருகேயுள்ள கீழப்புலியூர் கிராமத்தில் நின்று கொண்டிருந்த ஒரு காரில் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இச்சம்பவம் குறித்து மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காரில் இறந்து கிடந்தவர் சித்தலி கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த கணேசன் மகன் நல்லுசாமி (வயது 40) என்பதும், இவருக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிய நிலையில் இவரது மனைவி இறந்து 9 ஆண்டுகள் ஆவதும், இதனால் இவர் மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானதும் தெரிய வந்தது. மேலும் பெரம்பலூரில் உள்ள நான்கு ரோடு அருகே அரியலூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருவதும் தெரிய வந்தது. மேலும் இவருக்கு 2 மகன்கள் உள்ள நிலையில் இவர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நல்லுசாமி எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News