உள்ளூர் செய்திகள்

காகன்னை ஈஸ்வரர் கோவிலில் 51- நாள் கோமாதா பூஜை

Published On 2022-09-08 12:48 IST   |   Update On 2022-09-08 12:48:00 IST
  • காகன்னை ஈஸ்வரர் கோவிலில் 51- நாள் கோமாதா பூஜை தொடங்கியது
  • உலக நன்மைக்காக நடைபெறுகிறது


பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காக 51 நாள் கோமாதா பூஜை நேற்று தொடங்கியது.

எளம்பலூர் மகா சித்தர்கள் டிரஸ்ட் சார்பில் உலக மக்கள் நலன் கருதியும், மாதம் முறையாக மழை பொழியவும், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும், தர்ம சிந்தனையுடைய மக்கள் எல்லா நலங்களும், வளங்களும் பெற்று, குபேரலட்சுமி கடாக்ஷம் பெற்று வாழ ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து 51 நாட்கள் கோமாதா பூஜை நடைபெற்று வருகிறது.

இதன்படி இந்தாண்டு கோமாதா பூஜை நேற்று தொடங்கியது. இதையொட்டி பிரம்மரிஷி மலையடிவாரத்தில் உள்ள அன்னை காகன்னை ஈஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகாதீபாதணையும், கோமாதா பூஜையும் நடந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மகா சித்தர்கள் அறக்கட்டளை இணை நிறுவனர் ரோகிணி மாதாஜி தலைமை வகித்தார். தவயோகிகள் சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள் ஆகியோர் முன்னின்று பூஜைகளை நடத்தினர். இதில் ராதா மாதாஜி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News