உள்ளூர் செய்திகள்

தருமபுரி ரெயில் நிலையத்தில் லிப்ட் இருப்பது குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

Published On 2023-06-02 09:45 GMT   |   Update On 2023-06-02 10:13 GMT
  • முதியவர்களும், கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும், மாற்றுத்திறனாளிகளும் படிக்கட்டுகளில் ஏறி சென்று 2-வது பிளாட்பாரத்தில் இறங்கி ரெயிலில் பயணித்து வருகின்றனர்.
  • லிப்ட் இருப்பது பெரும்பாலான பயணிகளுக்கு தெரிவ தில்லை. இதனால் கர்ப்பிணி பெண்கள் முதல் வயதானோர் வரை படிக்கட்டையே பயன்படுத்தி வருகின்றனர்.

தருமபுரி,

ஆங்கிலேயேர் ஆட்சி காலத்தில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் தருமபுரியில் ரெயில்வே தடம் அமைத்து போக்குவரத்து வசதி ஏற்படுத்தினர்.

தருமபுரி ரெயில்வே தடம் வழியாக டெல்லி, மும்பை, மாராட்டியம், கர்நாடகம் போன்ற வடமாநிலங்களில் இருந்து தென் தமிழகமான திருநெல்ேவலி, கன்னி யாகுமரி வரையும், மேற்கு பகுதியான கோயமுத்தூர், கேரளா வரையும் ரெயில் போக்குவரத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த தருமபுரி ரெயில் நிலையமானது வடமாநிலங்களில் இருந்து தென் மாநிலமான தமிழகத்தை இணைக்கும் ஒரு இணைப்பு பாலமாக உள்ளது.

காலப்போக்கில் சேலம் மாவட்டத்தில் இருந்து தருமபுரி தனி மாவட்டமாக பிரித்து அறிவிக்கப்பட்டது. இதனால் ரெயில்வே நிறுத்தமாக இருந்த தருமபுரியில் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட போது ரெயில்வே தடம் விரிவாக்கம் செய்யப்பட்டு ரெயில்நிலையம் புதுபொலி வுடன் புதுப்பிக்கப்பட்டது.

இந்த ரெயில் நிலையத்தில் 3 பிளாட்பாரம் அமைக்கப்பட்டுள்ளது. தருமபுரி ரெயில் நிலையம் வழியாக தற்போது நாள்தோறும் 12 எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 6 பாசஞ்சர் ரெயில்களும், வாரந்தோறும் 8 சிறப்பு ரெயில்கள் உள்பட மொத்தம் 26 ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்த ரெயில் நிலையத்தில் முதல் பிளாட்பாரத்தில் பெங்களூருவில் இருந்து தருமபுரி வரை வரும் 2 பாசஞ்சர் ரெயில்கள் மட்டும் நின்று செல்லும், மற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 4 பாசஞ்சர் ரெயில்கள் 2-வது பிளாட்பாரத்தில் நின்று செல்லும்.

மற்ற 3 பிளாட்பா ராத்தில் வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து தருமபுரி மாவட்டத்திற்கு பொருட்களை ஏற்றி வரும் சரக்கு ரெயில்கள் நின்று பொருட்களை இறக்கி செல்வதற்காக பயன்படுத்த ப்பட்டு வருகிறது.

அவ்வாறு 2-வது பிளாட்பாரத்தில் நிற்கக்கூடிய ரெயில்களில் பயணிகள் ஏறி செல்வதற்கு வசதியாக ஒரு நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் தான் வயதான முதியவர்களும், கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும், மாற்றுத்திறனாளிகளும் படிக்கட்டுகளில் ஏறி சென்று 2-வது பிளாட்பாரத்தில் இறங்கி ரெயிலில் பயணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரெயில் நிலையத்தில் லிப்ட்டு வசதி ஏற்படுத்தி கொடுத்தால் படிக்கட்டுகளில் ஏறி கஷ்டப்படும் பயணிகளுக்கு மிக வசதியாக இருக்கும் என்று பல்வேறு அமைப்பி னர், கோரிக்கை விடுத்தனர்.

இதனையைடுத்து தருமபுரி ெரயில்வே நிலையத்தில் பயணிகள் பயன்பெறும் வகையில் லிப்ட் வசதி அமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் அங்கு லிப்ட் இருப்பது பெரும்பாலான பயணிகளுக்கு தெரிவ தில்லை. இதனால் கர்ப்பிணி பெண்கள் முதல் வயதானோர் வரை படிக்கட்டையே பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து பயணிகளுக்கும் தெரியும் வகையில் படிக்கட்டு மற்றும் டிக்கெட் கொடுக்கும் இடங்களில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் மற்றும் ஒலிபெருக்கி மூலம் ஒலிக்க செய்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News