உள்ளூர் செய்திகள்

ஊட்டி ரோஜா பூங்காவில் கவாத்து பணி

Published On 2023-02-11 09:24 GMT   |   Update On 2023-02-11 09:24 GMT
  • கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார்.
  • சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் ஊட்டி ரோஜா பூங்கா பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு நடவு செய்யப்பட்டுள்ள ரோஜா ரகங்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும்.

தற்போது 4,201 வீரியரக ரோஜா ரகங்களில் சுமார் 31,500 ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு கோடை பருவ காலத்தை முன்னிட்டு பூங்காவில் கவாத்து பணிகள் மேற்கொள்வதன் மூலமாக ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து ரோஜா மலர்கள் பூத்து, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும்.

ஊட்டி ரோஜா பூங்காவில் கவாத்து பணியை கலெக்டர் அம்ரித் தொடங்கி வைத்தார். தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர்(பொ) ஷிபிலா மேரி, துணை இயக்குனர்(பொ) பாலசங்கர், உதவி இயக்குநர்கள் அனிதா, ராதாகிருஷ்ணன், ஜெயந்தி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News