உள்ளூர் செய்திகள்
மொரப்பூர் அருகே குடும்ப தகராறில் பெண் மாயம்
- கடந்த 21-ந் தேதி வீட்டில் இருவருக்கும் மீண்டும் குடும்பத்தகராறு ஏற்பட்டது.
- இதனால் மதியம் 2 மணி அளவில் வீட்டிலிருந்த சக்தி திடீரென காணவில்லை.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ள கல்லடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது42). இவரது மனைவி சக்தி (39). இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 21-ந் தேதி வீட்டில் இருவருக்கும் மீண்டும் குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் மதியம் 2 மணி அளவில் வீட்டிலிருந்த சக்தி திடீரென காணவில்லை.
இதனால் முருகன் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து முருகன் மொரப்பூர் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.