உள்ளூர் செய்திகள்

கந்திகுப்பம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெண் சாவு

Published On 2022-12-21 15:17 IST   |   Update On 2022-12-21 15:17:00 IST
  • மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது.
  • அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் சக்கனப்பள்ளிப் பகுதியை சேர்ந்தவர் சக்தி, இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 30). இவர்களது மகன் சுஜித்குமார் (12).

சக்தி தனது மனைவி மற்றும் மகனுடன் தனது இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி-சென்னை சாலையில் சென்று கொண்டிருந்தார்.

சுண்டம்பட்டி என்ற இடத்தருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த விஜயலட்சுமி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

சக்தி, சுஜித்குமார் இருவருக்கும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது.இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News