உள்ளூர் செய்திகள்

பாகலூர் அருகே2 வயது குழந்தை சாவு

Published On 2022-12-29 15:12 IST   |   Update On 2022-12-29 15:12:00 IST
  • குழந்தைக்கு பாட்டில் மூலம் பால் கொடுக்கும் போது மூச்சுதிணறல் ஏற்பட்டது.
  • போகும் வழியிலேயே அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே முதுகனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு 2 வயதில் மனோஜ்குமார் என்ற மகன் உள்ளார்.

இந்த நிலையில் நேற்று குழந்தைக்கு பாட்டில் மூலம் பால் கொடுக்கும் போது மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதனால் அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News