உள்ளூர் செய்திகள்

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்

Published On 2022-11-29 07:44 GMT   |   Update On 2022-11-29 07:44 GMT
  • வாடகை வீட்டில் வசிக்கும் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு முற்றுகையிட்டனர்.
  • கலெக்டர் அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது .

இந்த நிலையில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தை 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வாடகை வீட்டில் குடியிருப்பதால் வாடகை கொடுக்க முடியவில்லை. அதனால் வீதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவரை 4 மனு கொடுத்தும்எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களின் நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டத்தில் பெண்கள் ஈடுபட்டனர். போலீசாரும் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News