உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரை அருகே மர்ம விலங்கு கடித்து மாடு, ஆடு பலி

Published On 2023-02-06 09:58 GMT   |   Update On 2023-02-06 09:58 GMT
  • முன்பு பட்டியில் இருந்த 13 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்தது.
  • இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த எக்கூர் கிராமத்தில் உள்ள திருமணி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன். விவசாயி. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பட்டியில் இருந்த 13 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்தது.

இந்த நிலையில் அதே பகுதியில் நேற்று பக்தவாசலம் என்பவர் தனது தோட்டத்தில் உள்ள கொட்டகையில் கட்டிவைத்தியிருந்த 1 மாட்டை மர்ம விலங்கு கடித்து இறந்துள்ளது.

இந்த நிலையில் பழனி வட்டத்தில் உள்ள பூங்காவனம் என்பவரின் கரும்பு தோட்டத்தில் நேற்று பிற்பகல் மேய்ச்சலுக்கு கட்டி வைத்திருந்த 1 ஆடு மர்ம விலங்கு கடித்து பலியானது. இச் சம்பவங்களால் அந்த பகுதியில் உள்ள விவசாயிகளிடம் பீதி நிலவுகிறது.

இது குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News