தி.மு.க சார்பில் வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
- பேரூர் கழக செயலா ளர்கள் முரளி, எம்.ஏ. வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது.
- நலத்திட்ட உதவிகளின் விபரம் உள்ளிட்டவைகள் பூர்த்தி செய்வது குறித்து விளக்கமளித்தார்
மாரண்டஅள்ளி,
தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க மேற்கு மாவட்ட வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் பேரூர் கழக செயலாளர்கள் முரளி, எம்.ஏ. வெங்கடேசன் தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாநில தகவல் நுட்ப துணைசெயலாளர் மற்றும் பாலக்கோடு சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளர் தமிழ் மாறன் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி மாவட்ட தி.மு.க மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் உயர் கல்விதுறை அமைச்சர் பழனியப்பன் கலந்து கொண்டு வாக்கு சாவடி முகவர்க ளுக்கு வாக்கா ளர்களின் விண்ணப்பங்களில் குடும்ப உறுப்பிணர்கள் விபரம், அரசிடம் இருந்து பெறும் நலதிட்ட உதவிகளின் விபரம் உள்ளிட்டவைகள் எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது குறித்து பு விளக்கமளித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் வக்கில் மணி, மாவட்ட பொருளாளர் முருகன், மாநில விவசாய அணி துணைத் தலைவர் சுப்ரமணி, ஒன்றிய செயலாளர்கள் முனியப்பன், அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், மாவட்ட நெசவாளர் பிரிவு அமைப்பாளர் ராஜபார்ட் ரங்கதுரை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஹரிபிரசாத் மற்றும் பூத் கமிட்டி வாக்கு சாவடி முகவர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், பேரூர் கழக பொறுப்பாளர்கள் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.