உள்ளூர் செய்திகள்

தொழிற்பயிற்சி அலுவலர்கள் உண்ணாவிரதம்

Published On 2023-07-29 08:23 GMT   |   Update On 2023-07-29 08:23 GMT
  • தொழிற்பயிற்சி அலுவலர்கள் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடத்தினர்.
  • சி.பி.டி. தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்

மதுரை

மதுரை கலெக்டர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது. சங்கத்தின் பொதுச்செயலாளர் செல்வம், மாநில செயலாளர் நவநீதன், மாவட்ட தலைவர் தெய்வராஜ், மாவட்ட செயலாளர் நீதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

டிப்ளமோ, பொறியியல் போன்ற உயர் கல்வியில் கூட அமுல்படுத்தாக 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பயிலும் பயிற்சியாளர்க ளுக்கு அமுல்படுத்துவது என்பது திறனை பரிசோதிக்க ஏதுவாக இல்லாத நிலை உள்ளது. மேலும் பயிற்சியாளர்களின் தரம் குறைய வாய்ப்புள்ளது.

இதனால் சி.பி.டி. தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் நடந்தது.

Tags:    

Similar News