உள்ளூர் செய்திகள்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மரியாதை

Published On 2023-04-20 09:49 GMT   |   Update On 2023-04-20 09:49 GMT
  • டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
  • இணைச்செயலாளர் ஓய்.ஆசை அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாைத செலுத்தினார்கள்.

மதுரை

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி மதுரை அலுவலகத்தில் மலர்களால் அலங்கரிக்க பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு மதுரை நாடார் உறவின்முறை பொதுச்செயலாளரும், அகில இந்திய நாடார் இளைஞர் பேரவை அவைத் தலைவருமான எஸ்.கே. மோகன் மாலை அணிவித்து மரியாைத செலுத்தினார்.

இதில் மதுரை நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் வி.பி.மணி, ம.நா.உ. ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி துணைத்தலைவர் பி.செந்தில்குமார், துணை செயலாளர் சி.பாஸ்கரன், விடுதிக்குழு செயலாளர் பா.குமார், பாரத பெருந் தலைவர் காமராஜ் அறநிலையத்தின் துணைத் தலைவர் எம்.எஸ்.சோம சுந்தரம், பொதுச்செயலாளர் கே.பி.எம்.எம்.காசமணி, ம.நா.உ. ஜெயராஜ் நாடார் அன்னபாக்கியம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி இணைச்செயலாளர் ஓய்.ஆசை அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டு மலர்தூவி மரியாைத ெசலுத்தினார்கள்.

Tags:    

Similar News