உள்ளூர் செய்திகள்

மருது பாண்டியர்கள் சிலைக்கு இந்திய ஜனநாயக கட்சியினர் மரியாதை

Published On 2023-10-28 08:51 GMT   |   Update On 2023-10-28 08:51 GMT
  • மதுரையில் மருது பாண்டியர்கள் சிலைக்கு இந்திய ஜனநாயக கட்சியினர் மரியாதை செலுத்தப்பட்டது.
  • இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மதுரை

மருதுபாண்டியர்களின் குருபூஜையை முன்னிட்டு மதுரையில் உள்ள அவர்களது சிலைகளுக்கு இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.

மாநில அமைப்பு செயலாளரும், மதுரை மாவட்ட செயலாளருமான அன்னை இருதயராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் ஞானசேகரன் (வடக்கு), செந்தில் (கிழக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை தலைவர் நெல்லை ஜீவா மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் இந்திய ஜனநாயக கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் செந்தூர் பாண்டியன், கிழக்கு மாவட்ட செயலாளர் நீலமேகம்,வடக்கு மாவட்ட செயலாளர் ராபின்சன்,

மாநில மகளிரணி அணி துணை செயலாளர் சகிலாபோஸ்,

மாவட்ட பொருளாளர் முத்துராஜா,அமைப்பு செயலாளர் அமிர்த கிருஷ்ணன்,வேந்தர் பேரவை செயலாளர் கதிரவன், மாநகர் மாவட்ட மகளிரணி இணை செயலாளர் அன்னபூரணி, மாவட்ட துணை செயலாளர் ஞானசுந்தர், இளைஞரணி செயலாளர் ராஜேஷ், பொருளாளர் ரஞ்சித், வர்த்தக அணி செயலாளர் செந்தில்குமார், உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News