உள்ளூர் செய்திகள்

ஐ.ஜே.கே. தலைவர் ரவி பச்சமுத்து தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு

Published On 2023-07-29 12:03 IST   |   Update On 2023-07-29 12:03:00 IST
  • தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற நடைபயணத்தை ராமேசுவரத்தில் தொடங்கினார்.
  • ஐ.ஜே.கே. தலைவர் ரவி பச்சமுத்து தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மதுரை

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற நடைபயணத்தை ராமேசுவரத்தில் நேற்று தொடங்கினார். இதற்காக நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திர அமித்ஷா கலந்து கொண்டு நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக அண்ணாமலையின் நடைபயணத்தை ஆதரிக்கும் விதமாக இந்திய ஜனநாயகத்தின் தலைவர் டாக்டர்.ரவி பச்சமுத்து அவர்களும் கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் ஜெயசீலன், கட்சியின் முதன்மை அமைப்பு செயலாளர் வெங்கடேசன், கட்சியின் தலைமை நிலைய செயலாளர் வரதராஜன், மாநில மகளிரணி செயலாளர் அமுதா ராஜேஸ்வரன், மாநில அமைப்பு செயலாளர் அன்னை இருதயராஜ், மாநில மகளிரணி துணைச் செயலாளர் இளவரசி, மதுரை மாநகர் மாவட்ட பொருளாளர் முத்துராஜா.

மதுரை மாநகர் மாவட்ட முதன்மை அமைப்பு செயலாளர் ஜான் பெனாண்டிக், மதுரை மாநகர் மாவட்ட அமைப்பு செயலாளர் அமிர்த கிருஷ்ணன், மதுரை மாநகர் மாவட்ட மகளிரணி செயலாளர் செல்வி, மதுரை மாநகர் மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் சாந்தி, மதுரை மாநகர் மாவட்ட வேந்தர் பேரவை செய லாளர் கதிரவன் மற்றும் ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News