உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம்

Published On 2023-04-04 09:29 GMT   |   Update On 2023-04-04 09:29 GMT
  • உசிலம்பட்டியில் நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
  • மேற்கண்ட தகவலை மதுரை கலெக்டர் அனீஸ்சேகர் தெரிவித்துள்ளார்.

மதுரை

உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம், நாளை (5-ந்தேதி) காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் பல்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள், 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், காதொலி கருவி மற்றும் மாதாந்திர உதவித் தொகை ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. எனவே அந்தப்பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் வருவாய் கோட்டாட்சியரை நேரில் சந்தித்து பயன்பெறலாம்.

மேற்கண்ட தகவலை மதுரை கலெக்டர் அனீஸ்சேகர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News