உள்ளூர் செய்திகள்

மதுரை விமான நிலையத்தில் கே.எஸ்.அழகிரியை காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்றனர்.

மணிப்பூர் கலவரத்திற்கு மத்திய அரசே காரணம்-கே.எஸ்.அழகிரி பேட்டி

Published On 2023-07-15 08:44 GMT   |   Update On 2023-07-15 08:44 GMT
  • விருதுநகரில் நடைபெறும் காமராஜர் விழாவில் பங்கேற்பதற்காக கே.எஸ்.அழகிரி மதுரை வந்தார்.
  • மணிப்பூர் கலவரத்திற்கு மத்திய அரசே காரணம் என நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

மதுரை

விருதுநகரில் நடைபெறும் காமராஜர் விழாவில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

மணிப்பூர் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகையே 35 லட்சம் தான். சிறிய அளவில் மக்கள் தொகை உள்ள ஒரு மாநிலத்தில் சட்ட ஒழுங்கை காப்பாற்ற முடியாமல் போனது மிக பெரிய தவறாகும். காங்கிரஸ் கட்சி சார்பில் அந்த மக்களுக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறோம்.

இந்த கலவரத்திற்கு காரணமே மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தான். அங்கே இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என்று பிரித்து கலவரத்தை தூண்டும் வேலைகளை செய்கின்றனர். தென்காசியில் மறு வாக்கு எண்ணிக்கை செய்ததில் தவறில்லை. கர்நாடகா மேகதாது அணை பிரச்சனையில் தமிழகத்தின் உரிமை ஒருபோதும் விலை போகாது.

தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழக அரசிற்கு ஆதரவாக உள்ளன. ஆனால் தமிழகத்தில் உள்ள பா.ஜ.க. மட்டும் கர்நாடகாவிற்கு ஆதரவாக இருக்கிறது.கர்நாடகா பா.ஜ.க. தலைவர் பொம்மை. கர்நாடகத்துக்கு ஆதரவாக இருக்கிறார். ஆனால் தமிழகத்தில் இருக்கும் பா.ஜ.க. தலைவர் தமிழக அரசுக்கு ஆதரவாக இல்லாமல் கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு பின்பு இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி மாபெரும் வளர்ச்சி பெற்று வருகிறது.

சோனியா காந்தி அழைப்புக்கு பின்பு காங்கிரஸ் கட்சியை ஏற்க மறுத்தவர்கள் கூட தற்போது ஆதரவு தெரி வித்து வரவேற்கிறார்கள். பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என்பதை பின்னர் முடிவு செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின் போது மதுரை மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் சையது பாபு, சிலுவை, கவுன்சிலர்கள் ஜெய்ஹிந்த்பு ரம் முருகன், ராஜ் பிரதாபன், தல்லாகுளம் முருகன், சுந்தரமகாலிங்கம், மலர் பாண்டியன், வாஞ்சிநாதன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News