உள்ளூர் செய்திகள்

மழை வேண்டி கள்ளழகர் கோவிலுக்கு மாட்டுவண்டி பயணம்

Published On 2023-08-07 08:13 GMT   |   Update On 2023-08-07 08:13 GMT
  • மழை வேண்டி கள்ளழகர் கோவிலுக்கு மாட்டுவண்டி பயணம் செய்தனர்.
  • மாட்டுவண்டி பயணம் மேற்கொண்டு கள்ளழகரை அந்த பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

சோழவந்தான்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள சி.புதூர் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் 2 ஆண்டுக்கு ஒரு முறை ஆடி 18-ஐ முன்னிட்டு காப்பு கட்டி விரதம் இருந்து பாரம் பரிய முறையில் மாட்டு வண்டிகளை பூட்டி வரிசை யாக ஒன்றன் பின் ஒன்றாக தங்களது குடும்ப உறுப்பி னர்களுடன் அழகர்கோவி லுக்கு சென்று அங்கேயே இரவு முழுவதும் தங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்த உள்ளனர்

அழகர்கோவில் மலை மீது உள்ள ராக்காயி அம்மன் கோவில் தீர்த்தத் தில் புனித நீராடிய பின்னர் கள்ளழகர், ராக்காயி அம்மன், 18-ம் படி கருப்ப சாமி தெய்வங்களை வணங்கி விட்டு தாங்கள் நேர்த்தி கடனாக கொண்டு வந்த கோழி, சேவல்களை பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட்டு தங்களது விரதத்தினை முடித்து சொந்த ஊர் திரும்புவது இவர்களது வழக்கமாக உள்ளது.

விவசாயம் செழிக்க, மழை பொழிய வலியுறுத்தி யும் இந்த பாரம்பரிய மாட்டுவண்டி பயணம் மேற்கொண்டு கள்ளழகரை அந்த பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News