உள்ளூர் செய்திகள்

பி.பி.சி. ஆவணப்படம் வெளியிடப்படுவதாக அறிவிப்பு

Published On 2023-01-30 08:29 GMT   |   Update On 2023-01-30 08:29 GMT
  • பி.பி.சி. ஆவணப்படம் வெளியிடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
  • ஜெய்ஹிந்துபுரத்தில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை

குஜராத் மாநிலத்தில் நடந்த கலவரம் தொடர்பாக, பி.பி.சி. நிறுவனம், ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இதில் கலவரத்துக்கு சூத்திரதாரி யார்? என்பது தொடர்பான விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த ஆவண படத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்தப் படத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் பி.பி.சி. ஆவணப்படம் தடையை மீறி திரையிடப்பட்டு வருகிறது.

மதுரை ஜெய்ஹிந்துபுரம், வீரகாளியம்மன் கோவில் தெருவில் பி.பி.சி. ஆவணப்படம் திரையிடப்படும் என்று அகில இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் அறிவித்தி ருந்தது. நேற்று அந்தப் படத்தை திரையிடுவதற்கான முயற்சி நடந்தது.

அப்போது பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்பு நிர்வாகிகள், பி.பி.சி ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அந்தப் படத்தை திரையிடக்கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்துடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பி.பி.சி. ஆவண படத்தை ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகரில் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு திரையிடுவது என்று நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

படம் பார்க்க வரும் பொது மக்களுக்கு இலவசமாக பாப்கார்ன் வழங்கவும் ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். அதே நேரத்தில் பி.பி.சி. ஆவண பட வெளியீட்டை தடுத்து நிறுத்தும் முயற்சியில் பா.ஜ.க. உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளன.

இதையடுத்து ஜெய்ஹிந்து புரம் ஜீவா நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.கண்காணிப்பு பணியையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News