உள்ளூர் செய்திகள்

ஆவணி மூல திருவிழா 13-ந்தேதி தொடங்கம்

Published On 2023-08-06 08:14 GMT   |   Update On 2023-08-06 08:14 GMT
  • மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழா 13-ந்தேதி தொடங்குகிறது.
  • சுவாமியும், அம்மனும் பிட்டு தோப்புக்கு செல்வர்.

மதுரை

மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா போன்றவை சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டு ஆவணி மூல திருவிழா வருகிற 13ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை ெயாட்டி 12 நாட்களுக்கு 12 திருவிளையாடல் நிகழ்ச்சி கள் நடைபெறும்.

19-ந்தேதி கருங்குருவிக்கு உபதேசம் செய்தல், 20-ந் தேதி நாரைக்கு மோட்சம் அளித்தல், 21-ந்தேதி மாணிக்கம் விற்றல், 22-ந் தேதி தருமிக்கு பொற்கிழி வழங்கியது, 23-ந்தேதி உலவாக்கோட்டை அருளி யது, 24-ந்தேதி பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை, 26-ந்தேதி நரியை பரி யாக்கிய லீலை, 28-ந் தேதி விறகு விற்ற லீலை நடைபெறும்.

24-ந்தேதி இரவு சுந்தரே சுவரர் பட்டாபிஷேகம் நடைபெறும். சுந்தரேசு வரரிடம் செங்கோல் வழங்கப்பட்டு சுவாமியும், அம்மனும் பிரகாரத்தில் வலம் வருவர். 27-ந்தேதி பிட்டுத்திருவிழா நடை பெறும்.

திருவிழா நாட்களில் 4 ஆவணி மூல வீதிகளிலும் பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமியும், அம்மனும் வீதிஉலா வருவார்கள்.

29-ந்தேதி சட்டத் தேரில் சுவாமி-அம்மன் எழுந்த ருள்வர். அன்று இரவு சப்தவர்ண சப்பர உலா நடைபெறும். 30-ந் தேதி பொற்றாமரை குளத்தில் தீர்த்தாரியுடன் தீர்த்தவாரி நடைபெறும். சுவாமி-அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருள்வர். அத்துடன் திருவிழா நிறைவடையும்.

Tags:    

Similar News