உள்ளூர் செய்திகள்

அகில இந்திய நாடார் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம்

Published On 2022-09-13 08:33 GMT   |   Update On 2022-09-13 08:33 GMT
  • மதுரையில் அகில இந்திய நாடார் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
  • சிறப்பு அழைப்பாளராக நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கலந்து கொண்டார்.

மதுரை

அகில இந்திய நாடார் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் மதுரை எம்.கே.புரம் வாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

மாநில செயலாளர் செல்வராஜ் நாடார் வரவேற்றார். முருகானந்தம் நாடார் தலைமை தாங்கினார். புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாநில நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். ஏ.பி.எஸ். லிங்கம்நாடார், கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், சுந்தரேசனார் நாடார், முருகானந்தம் நாடார் உள்ளிட்ட பலர் பேசினர்.

சிறப்பு அழைப்பாளராக நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் கலந்து கொண்டார். கொள்கை பரப்புத்துறை மாநில ஒருங்கிணைப்பாளர் நாலுமாவடி ராமஜெயம் நாடார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News