உள்ளூர் செய்திகள்

கோவையில் மதுபாட்டில்கள் பறிமுதல்

Published On 2023-01-01 08:45 GMT   |   Update On 2023-01-01 08:45 GMT
  • சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றது
  • வாகனத்தில் 2 அட்டை பெட்டிகளில் மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் போலீசார் சோதனை சாவடியில் வந்த வாகனங்களை மறித்து சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வேண் ஒன்று வந்த போது போலீசார் அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அந்த வாகனத்தில் 2 அட்டை பெட்டிகளில் மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் வாகனத்தின் உரிமையாளர் விஜயகுமார் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News