உள்ளூர் செய்திகள்

கோவை மத்திய ஜெயிலில் ஆயுள் தண்டனை கைதி திடீர் உயிரிழப்பு

Published On 2022-07-02 05:21 GMT   |   Update On 2022-07-02 05:21 GMT
  • ஜெயிலில் இருந்த ராஜூ போயனுக்கு கடந்த 25-ந் தேதி திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.
  • ராஜூ போயன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கோவை:

ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி அருகே உள்ள ஓடந்துறையை சேர்ந்தவர் ராஜூ போயன்(வயது 76). இவர் 2016-ம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

ஜெயிலில் இருந்த ராஜூ போயனுக்கு கடந்த 25-ந் தேதி திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது.

இதனை பார்த்த கைதிகள் இதுகுறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக அறைக்கு விரைந்து சென்று ராஜூ போயனை சிகிச்சைக்காக ஜெயிலில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் ராஜூ போயன் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவரை டாக்டர்கள் ஜெயில் கைதிகள் வார்டில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ராஜூபோயன் நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News