உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவி கடத்தல்

Published On 2022-10-13 14:50 IST   |   Update On 2022-10-13 14:50:00 IST
  • மாணவி கடந்த 10 ஆம் தேதி இரவு 8 மணியில் வீட்டில் இருந்தவர் திடீரென காணவில்லை.
  • காந்தி நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் கோகுல கண்ணன் (வயது24) என்பவர் கடத்தி சென்றதாக தகவல் தெரிந்தது.

மொரப்பூர்,

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ள சிங்கிரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). இவரது மகள் மொரப்பூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவி கடந்த 10 ஆம் தேதி இரவு 8 மணியில் வீட்டில் இருந்தவர் திடீரென காணவில்லை.

பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் காந்தி நகர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் கோகுல கண்ணன் (வயது24) என்பவர் கடத்தி சென்றதாக தகவல் தெரிந்தது.

இது குறித்து கண்ணன் மொரப்பூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் மொரப்பூர் போலீஸ்- இன்ஸ்பெக்டர் வசந்தா வழக்கு பதிவு செய்து பள்ளி மாணவியையும், கடத்தி சென்ற கோகுல கண்ணனையும் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News