உள்ளூர் செய்திகள்

மாணவ, மாணவிகள் உறுதிமொழியேற்பு

Published On 2022-07-09 09:17 GMT   |   Update On 2022-07-09 09:17 GMT
  • மாணவ, மாணவிகள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • நகராட்சி ஆணையர் ச தலைமையில் நடைபெற்றது.

கரூர்:

குளித்தலை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 560க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர், தூய்மையான நகராட்சியாக உருவாக்க வேண்டும் என்று தமிழக அரசின் ஆணைக்கிணங்க தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் எனது குப்பை எனது பொறுப்பு தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து நகராட்சி ஆணையர் சுப்புராம் தலைமையில் தலைமை ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். விழாவில் நகராட்சி பொறியாளர் ராதா, நகராட்சி சுகாதார ஆய்வாளர் இஸ்மாயில், கோவிந்தராஜ், மாசி மற்றும் ஆசிரியர்கள் நகராட்சி பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்,

Tags:    

Similar News