உள்ளூர் செய்திகள்

வெங்கடேஸ்வரா நகரில் தொற்றுநோய் பரவும் அபாயம்

Published On 2022-08-24 13:36 IST   |   Update On 2022-08-24 13:36:00 IST
வெங்கடேஸ்வரா நகரில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது

கரூர்:

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர் - தாந்தோணிமலை செல்லும் வழியில் வெங்கடேஸ்வரா நகர் உள்ளது. இந்த நகரில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியிலிருந்து டெக்டைல்ஸ், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் நூற்றுக்கணக்கில் சென்று வருகின்றனர்.

ராயனூர் முதல் தாந்தோணிமலை வரை வெங்கடேஸ்வர நகர் வழியாக சாக்கடை கால்வாய் செல்கிறது. இந்த சாக்கடை கால்வாய் மாத கணக்கில் சுத்தம் செய்யாததால், பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பைகள் அதிக அளவு தேங்கி கழிவுநீர் வெளியேற முடியாமல் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கொசு தொல்லையுடன், குடியிருப்பு பகுதிகளில் ஈக்கள் அதிகமாக வருவதுடன், தொற்று நோய் ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

மாணவ, மாணவிகள், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் உள்ளிட்டவர்களுக்கு தொற்றுநோய் ஏற்பட்டு டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவுவதற்கு முன்பு, பொதுமக்களை பாதுகாத்திடும் வகையில் கரூர் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக சாக்கடை கால்வாயை சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரித்திட வேண்டும், கழிவுநீர் தேங்காத வகையில் சாக்கடை கால்வாயை தொடர்ந்து சுத்தம் செய்திட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெங்கடேஸ்வரா நகர் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News