உள்ளூர் செய்திகள்
கழிவுநீர் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள்
- கழிவுநீர் வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருகிறது
- அப்பகுதிகளில் துா்நாற்றம் வீசியது.
கரூர்:
தொடா்மழையால் கரூா் குளத்துப்பாளையம் பகுதியில் கழிவு நீா் வாய்க்காலில் மழைநீருடன் கழிவு நீரும் வெளியேறியதால் ஏற்பட்ட அடைப்பை தூா்வாரும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டனா். கரூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கரூா் நகா் பகுதியில் வியாழக்கிழமை இரவு 2.4 மி.மீ. மழை பெய்தது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு பெய்த மழையில் கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 9-ஆவது வாா்டில் உள்ள குளத்துப்பாளையம், திட்டச்சாலை, பெரியாா் காலனி, பிள்ளையாா் கோவில் தெரு, சந்தை உள்ளிட்ட பகுதிகளில் செல்லும் வாய்க்கால்களில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவையால் அடைப்பு ஏற்பட்டு, கழிவு நீருடன் மழைநீரும் வெளியேறியதால் அப்பகுதிகளில் துா்நாற்றம் வீசியது.