உள்ளூர் செய்திகள்

நல்லிணக்க நாள் உறுதிமொழியேற்பு

Published On 2022-08-19 07:00 GMT   |   Update On 2022-08-19 07:00 GMT
  • நல்லிணக்க நாள் உறுதிமொழியேற்பு நடந்தது
  • கலெக்டர் தலைமையில் நடந்தது

கரூர்:

கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நல்லிணக்க நாள் உறுதிமொழியேற்பு மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடைபெற்றது. கலெக்டர் நல்லிணக்க நாள் உறுதிமொழியை வாசிக்க, அனைத்துத் துறை அலுவலர்களும் தொடர்ந்து வாசித்து உறுதிமொழியை ஏற்றனர்.

இந் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.லியாகத், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News