உள்ளூர் செய்திகள்

தாலுகா அலுவலகங்களில் சிறுபான்மையினர் கடன் பெறுவதற்கான சிறப்பு முகாம்

Published On 2022-08-06 06:49 GMT   |   Update On 2022-08-06 06:49 GMT
  • சிறப்பு முகாம்களில் இந்த திட்டத்தில் கடன் பெற விண்ணப்பங்கள் அளிக்கலாம்.
  • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்

நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர் களுக்கான கடன் ஆகிய திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தை சிறுபான்மையினர் மக்கள் அறிந்து கடன் பெற்று வாழ்க்கை தரத்தை முன் னேற்றும் வகையில் கடன் விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் வருகிற 11-ந்தேதியும், திருவட்டார் தாலுகா அலுவலகத்தில் 12-ந்தேதியும், விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் 16-ந்தேதியும், கல்குளம் தாலுகா அலுவலகத்தில் 17-ந்தேதியும், அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் 18-ந்தேதியும், தோவாளை தாலுகா அலுவலகத்தில் 22-ந்தேதியும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. சிறப்பு முகாம்களில் இந்த திட்டத்தில் கடன் பெற விண்ணப்பங்கள் அளிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News