வெள்ளமடம் - குருசடி பகுதிகளில் நாளை மின்தடை
- உயர்மின்னழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- பூதப்பாண்டி மின் விநியோக உதவி செயற் பொறியாளர் தகவல்
நாகர்கோவில்:
பூதப்பாண்டி மின் விநியோகப் பிரிவுக்குட்பட்ட வெள்ளமடம் பீடரில் ஈசாந்திமங்கலம், நாவல்காடு மற்றும் ஞானதாசபுரம் பகுதி உயர்மின்னழுத்த பாதையில் நாளை (5-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக அன்றைய தினம் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை ஈசாந்தி மங்கலம், நாவல்காடு மற்றும் ஞான தாசபுரம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
ஆரல்வாய்மொழி மின் விநியோகப் பிரிவுக்கு உட்பட்ட உயர் மின் அழுத்த ப்பாதையில் 5 மற்றும் 6-ந் தேதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே நாளை (5-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை குருசடி, தேவசகாயம் மவுண்ட், மங்கம்மாள் சாலை பகுதி களில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
6-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை காமரின் ஸ்கூல், நெசவாளர் காலனி, வேதாத்ரி நகர் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.
மேற்கண்ட தகவல்களை பூதப்பாண்டி மின் விநியோக உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.