உள்ளூர் செய்திகள்

வெள்ளமடம்-இறச்சகுளம் பகுதிகளில் நாளை மின்தடை

Published On 2022-06-15 09:30 GMT   |   Update On 2022-06-15 09:57 GMT
  • உயர் மின் அழுத்தப் பாதையில் பராமரிப்பு மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணி
  • காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது

வெள்ளமடம்-இறச்சகுளம் பகுதிகளில் நாளை மின்தடை

நாகர்கோவில்:

தோவாளை மின் விநியோகப்பிரிவிற்குட் பட்ட வெள்ளமடம் உயர் மின் அழுத்தப் பாதையில் பராமரிப்பு மற்றும் மரக்கி ளைகளை அகற்றும் பணி நாளை (16-ந் தேதி) நடை பெற உள்ளது. இதேபோல் இறச்சகுளம் பீடரிலும் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளன.

எனவே நாளை காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை பீமநகரி, மகாத்மா நகர், திருப்பதிசாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், இறச்சகுளம், சன் காலேஜ் ரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

இதேபோல தோவாளை உயர் மின் அழுத்தப் பாதையில் 17-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை எல்.எச்.எல். நகர், ஆர்.டி.ஓ. அலுவலகம், விசுவாசபுரம், திருமலைபுரம், குமரன் புதூர், கிறிஸ்து நகர், ஈஸ்வர் காலனி, மணியா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. 18-ந் தேதி நாகர்கோவில் உப மின்நிலையத்தில் சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே வல்லன் குமாரன்விளை, தடிக்காரன் கோணம், வடசேரி, ஆசாரிபள்ளம், நாகர்கோவில், பெருவிளை, சுங்கான் கடை, கிருஷ்ணன் கோவில்,எம்.எஸ்.ரோடு, காலேஜ் ரோடு, கோர்ட் ரோடு, கே.பி. ரோடு, பால்பண்ணை, நேசமணி நகர், ஆசாரிபள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன் நகர், பார்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம் பகுதிகளில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் ஜவகர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News