மணவாளக்குறிச்சி அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி பலி
- நேற்று மதியம் 1 மணியளவில் வழக்கம்போல் ஊரில் உள்ள அனிவற்றிகுளத்தில் குளிப்பதற்கு சென்றார். 2 மணிக்கு மேலாகியும் சரசம் திரும்பி வீட்டிற்கு வரவில்லை
- தீயணைப்பு வீரர்கள் சம்பவ குளத்திற்கு விரைந்து சென்றனர்.அப்போது சரசத்தின் உடல் குளத்து நீரில் மிதந்தது.தீயணைப்பு வீரர்கள் குளத்தில் குதித்து அவரது மீட்டு கரை சேர்த்தனர்.
கன்னியாகுமரி ;
மணவாளக்குறிச்சி அருகே கருங்காலிவிளையை சேர்ந்தவர் சண்முக சுயம்பு.இவரது மனைவி சரசம் (வயது 75).
இவர் நேற்று மதியம் 1 மணியளவில் வழக்கம்போல் ஊரில் உள்ள அனிவற்றிகுளத்தில் குளிப்பதற்கு சென்றார். 2 மணிக்கு மேலாகியும் சரசம் திரும்பி வீட்டிற்கு வரவில்லை. குடும்பத்தினர் அவரை தேடி செல்லும்போது குளித்துவிட்டு வீடு திரும்பிய வேறு ஒரு பெண் சரசம் நீரில் முழ்கியதாக தகவல் தெரிவித்தார்.உடனே திங்கள்நகர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ குளத்திற்கு விரைந்து சென்றனர்.அப்போது சரசத்தின் உடல் குளத்து நீரில் மிதந்தது.தீயணைப்பு வீரர்கள் குளத்தில் குதித்து அவரது மீட்டு கரை சேர்த்தனர்.
தகவலறிந்த மணவாளக்குறிச்சி போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.