உள்ளூர் செய்திகள்

களியக்காவிளை அருகே முன்விரோதம் மோதல் - இரு தரப்பினர் மீது போலீசார் வழக்கு

Published On 2023-08-14 07:19 GMT   |   Update On 2023-08-14 07:19 GMT
  • நிலத்தகராறு முன் விரோதத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
  • ரவுடிகள் பட்டியலிலும் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி :

களியக்காவிளை அருகே உள்ள செம்மான்விளை பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ்ராஜ், தொழிலாளி. இவர், செம்மான்விளை சந்திப்பில் நின்ற போது அதே பகுதியைச் சேர்ந்த அங்கு வந்து தாக்கி உள்ளார். இதனை பார்த்த அபிலாஷ்ராஜ் தரப்பினர் விரைந்து வந்து ஈவின்ஜெறியை தாக்கினர். இந்த சம்பவத்தில் 2 பேரும் காயம் அடைந்தனர். நிலத்தகராறு முன் விரோதத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து இரு தரப்பினரும் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் களியக்காவிளை போலீசார் விசாரணை நடத்தி, ஈவின்ஜெறி மற்றும் அபிலாஷ்ராஜ் அவரது கூட்டாளிகள் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து அபிலாஷ்ராஜ் கைது செய்யப்பட்டார். ஈவின்ஜெறியை போலீசார் தேடி வருகின்றனர். இவர் மீது ஏற்கனவே போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. ரவுடிகள் பட்டியலிலும் அவரது பெயர் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News