உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி நான்கு வழி சாலையில் மோட்டார் சைக்கிள் மீது சொகுசு கார் மோதல்;வாலிபர் பலி - சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை

Published On 2022-12-29 07:29 GMT   |   Update On 2022-12-29 07:29 GMT
  • அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது
  • கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை கைப்பற்றி அதில் பதிவாகி இருந்த காரை தேடி வருகின்றனர்

கன்னியாகுமரி :

கன்னியாகுமரிசுனாமி காலனி கிளாரட்நகர் பகுதியைசேர்ந்தவர் அருண் (வயது29).இவர் மீனவர் ஆவார். இவர் கடலில் மீன்பிடிக்கும் தொழில்செய்துவந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணி அளவில் தனதுநண்பரான கன்னியாகுமரி முருகன் குன்றம் அருகே உள்ள சுனாமி காலனியை சேர்ந்த ஆல்பர்ட் (வயது 35) என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சிலுவை நகர் பகுதியில் இருந்து நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

கன்னியாகுமரி ரெயில்வே மேம்பாலம் அருகே நான்கு வழி சாலையில் தனது நண்பர் ஆல்பர்டை இறக்கி விட்டு விட்டு வீட்டுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் திருப்பினார். அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அருண்சம்பவஇடத்திலே யே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு அவரது உடலை பிரேதபரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது பற்றி கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை கைப்பற்றி அதில் பதிவாகி இருந்த காரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News