உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

மணவாளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி கடத்தல்

Published On 2022-11-23 08:17 GMT   |   Update On 2022-11-23 08:17 GMT
  • வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.
  • கடத்தல் பிரிவில் (இந்திய தண்டனை சட்டம் 366 ஏ) வழக்குப் பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி:

மணவாளக்குறிச்சி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி நாகர்கோவில் அருகே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாமாண்டு படித்து வருகிறார்.

கடந்த 7-ந்தேதி இவர் வழக்கம்போல் கல்லூ ரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. வீட்டினர் உறவினர் மற்றும் நண்பர் கள் வீடுகளில் தேடியும் மாணவி குறித்து தகவல் கிடைக்கவில்லை. தொடர்ந்து மாணவி குடும் பத்தினர் துப்பு துலக்கியதில், அவர் தூத்துக்குடி மேற்கு கதிர்வேல் நகரை சேர்ந்த உறவினர் அருண் (24) என்பவர் கடத்தி சென்றதாக தெரிய வந்தது.

உடனே மாணவி குடும்பத்தினர் தூத்துக்குடி சென்று அருண் வீட்டில் கேட்டபோது, அவர்கள் மாணவி அங்கு இல்லை என கூறி மாணவியை மறைத்து வைத்து திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவியின் தந்தை குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் தூத்துக்குடியை சேர்ந்த அருண், அவரது தாய், தந்தை மற்றும் சகோதரர் ஆகிய 4 பேர் மீது கடத்தல் பிரிவில் (இந்திய தண்டனை சட்டம் 366 ஏ) வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News