உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் கோர்ட்டில் இலவச மருத்துவ முகாம்

Published On 2023-07-06 08:36 GMT   |   Update On 2023-07-06 08:36 GMT
  • வக்கீல்களுக்கும், நீதிபதிகளுக்கும் இலவச மருத்துவ முகாம்
  • பல்வேறு நோய்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் செய்து மருந்துகளும் இலவசமாக வழங்கினர்.

நாகர்கோவில் :

நாகர்கோவில் வக்கீல்களுக்கும், நீதிபதிகளுக்கும் இலவச மருத்துவ முகாம் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வக்கீல் சங்க அலுவலகத்தில் இன்று நடந்தது. நாகர்கோவில் வக்கீல் சங்க தலைவர் பால ஜனாதிபதி தலைமை தாங்கினார். மாவட்ட நீதிபதி அருள்முருகன் முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமில் வக்கீல் சங்க செயலாளர் ஆதிலிங்கம், இணை செயலாளர் சரவணன், மூத்த நூலகர் சலீம், செயற்குழு உறுப்பினர் ஜாக்குலின் ஆஷா, மூத்த உறுப்பினர்கள் ஜெயச்சந்திரன், பழனி ஜஸ்டின் கிறிஸ்டோபர், முன்னாள் வக்கீல் சங்க தலைவர் மரிய ஸ்டீபன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முகாமில் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை டாக்டர் குழுவினர் இருதய நோய், கண், காது, மூக்கு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்பட பல்வேறு நோய்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் செய்து மருந்துகளும் இலவசமாக வழங்கினர்.

Tags:    

Similar News