உள்ளூர் செய்திகள்

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் 

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா

Published On 2022-10-22 09:15 GMT   |   Update On 2022-10-22 09:15 GMT
  • திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது
  • தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

கன்னியாகுமரி:

திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் ஐப்பசி திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது. தொடர்ந்து பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

கடந்த ஜூலை 6-ந்தேதி திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து கோவிலுக்கு நாள் தோறும் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தென்னிந்திய அளவில் வைணவ பக்தர்களிடையே மிகவும் முக்கியமான திருக்கோவிலாக இக்கோவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

திருவட்டார் ஆதிகேச வப்பெருமாள் கோவிலில் ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது பங்குனி, ஐப்பசி மாதங்களில் பத்து நாட்கள் திருவிழா கொண்டாடப்ப டுவது வழக்கம்.

ஐப்பசி திருவிழாவின் முதல் நாளான நாளை (23-ந்தேதி) காலை 8.30 முதல் 9.30 மணிக்குள் திருக்கொடியேற்று நடைபெறுகிறது. அதை தொடர்ந்து சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், 2-ம் நாள் இரவு 9 மணிக்கு சுவாமி அனந்த வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு ருக்மணி சுயம்பவரம் கதகளி நடைபெறுகிறது.

3-ம் நாள் காலை 8 மணிக்கு பாகவத பாராய ணம், இரவு 9 மணிக்கு கமல வாகனத்தில் சுவாமி எழுந்தருளல், இரவு 10 மணிக்கு தட்ச யாகம் கதகளி ஆகியன நடக்கிறது. 4-ம் நாள் இரவு 7 மணிக்கு ராமாயண பாராயணம், இரவு 9.30 மணிக்கு சுவாமி பல்லாக்கில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு சந்தான கோபாலம் கதகளி.

5-ம் நாள் இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்றுதல், தொடர்ந்து கருடவாக னத்தில் சுவாமி பவனி வருதல், நள சரிதம் கதகளி ஆகியனவும், 6-ம் நாள் இரவு 7 மணிக்கு திருவாதிரைக்களி, 9 மணிக்கு சுவாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல், தொடர்ந்து கதகளி ஆகியனவும், 7-ம் நாள் இரவு 9 மணிக்கு சுவாமி பல்லாக்கில் பவனி வருதல் தொடர்ந்து துரியோதன வதம் கதகளி ஆகியன நடக்கிறது.

8-ம் நாள் இரவு 9 மணிக்கு பாலிவதம் கதகளி, 9-ம் நாள் இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வரக்கச்சேரி, இரவு 9.30 மணிக்கு சுவாமி கருடவாகனத்தில் பள்ளி வேட்டைக்கு எழுந்தருளல், 10-ம் நாள் (நவம்பர் முதல் தேதி) காலை 6 மணிக்கு ராமாயாண பாராயணம், காலை 11 மணிக்கு திருவி லக்கு எழுந்தருளல், இரவு 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வர இன்னிசைக் கச்சேரி, கருட வாகனத்தில் சுவாமி ஆறாட்டுக்கு தளியல் ஆற் றுக்கு எழுந்தருளல், இரவு 1 மணிக்கு குசேல விருத்தம் கதகளி ஆகியன நடக்கிறது.

விழாவுக்குகான ஏற்பாடுகளை கோவில் நிர்வா கத்தினர் மிக சிறப்பாக செய்து இருக்கின்றனர்.

Tags:    

Similar News