உள்ளூர் செய்திகள்

நாகர்கோவிலுக்கு சரக்கு ரெயிலில் 2600 டன் ரேசன் அரிசி வந்தது

Published On 2023-05-18 06:46 GMT   |   Update On 2023-05-18 06:46 GMT
  • ஆந்திராவில் இருந்து 42 வேகன்களில் சரக்கு ரெயில் மூலமாக 2600 டன் ரேசன் அரிசி
  • ரேசன் அரிசியை ரேசன் கடைகளுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் சப்ளை செய்யப்படும் ரேசன் அரிசி வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் கொண்டுவரப்படுகிறது. ஆந்திராவில் இருந்து 42 வேகன்களில் சரக்கு ரெயில் மூலமாக 2600 டன் ரேசன் அரிசி நாகர்கோவில் ெரயில் நிலையத்திற்கு இன்று கொண்டுவரப்பட்டது.

ரெயில் நிலையத்திற்கு வந்த ரேசன் அரிசியை தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர். கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ரேசன் அரிசியை ரேசன் கடைகளுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News