திங்கள் நகரில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
- காங்கிரஸ் தலைவர்கள் மீது, வழக்கு போடப்பட்டதற்கு எதிர்ப்பு
- திங்கள்நகர், பிலாக்கோட்டு சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
கன்னியாகுமரி :
குளச்சல் சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் சார்பில், திங்கள்நகர், பிலாக்கோட்டு சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
காங்கிரஸ் தலைவர்கள் மீது, வழக்கு போடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பா.ஜ.க. அரசை கண்டித்தும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி தலைவர் ஜேக்கப் தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ், குமரி கிழக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் ஜாண் சவுந்தர், திங்கள் நகர் பேரூராட்சி தலைவர் சுமன், கல்லுக்கூட்டம் பேரூராட்சி தலைவர் மனோகர்சிங், அணில்குமார் மற்றும் லாரன்ஸ் ஜெயசிங், செல்வம், ரீத்தாபுரம் பேரூராட்சி துணைத்தலைவர் விஜூமோன், தொகுதி பொதுச்செயலாளர்கள் தவசுமணி, ஆல்பர்ட், டிஜு, விஷ்ணு, வின்சென்ட், எமில், அரவிந்த், மணிகண்ட பிரபு, முன்னாள் வட்டார துணை தலைவர் தலைவர் தேவதாசன், முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.