உள்ளூர் செய்திகள்

இடலாக்குடி பாவலர் அரசு பள்ளி பகுதியில் மேயர் ஆய்வு

Published On 2023-09-08 08:42 GMT   |   Update On 2023-09-08 08:42 GMT
  • 3-வது வார்டுக்குட்பட்ட பிளசன்ட் நகரில் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் செலவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி
  • அவ்வை சண்முகம் சாலை முதல் குறுக்கு தெரு வரை ரூ.4 லட்சத்து 50ஆயிரம் செலவில் காங்கிரீட்தளம்

நாகர்கோவில் :

நாகர்கோவில் மாநகராட்சி 48-வது வார்டுக்குட்பட்ட இடலாக்குடி பாவலர் அரசு பள்ளி பகுதியில் மேயர் மகேஷ் இன்று காலை ஆய்வு செய்தார். அந்த பகுதியில் கழிவு நீர் ஓடையின் மூடி பழுதடைந்து காணப்பட்டது. அதை உடனடியாக சரி செய்ய மேயர் மகேஷ் உத்தரவிட்டார்.பின்னர் அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடைகளை சுத்தம் செய்யவும் அறிவுறுத்தினார். 48-வது வார்டுக்குட்பட்ட பகுதியில் உள்ள ஓடை ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்து அதை உடனடியாக அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது மாநகர் நல அதிகாரி ராம்குமார் சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள், மண்டல தலைவர் ஜவகர், கவுன்சிலர் பியாசாஹஜிபாபு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து 1-வது வார்டுக்குட்பட்ட கடை தெரு பகுதியில் ரூ.2 லட்சம் செலவில் மழைநீர் வடிகால் ஓடை கான்கிரீட் அமைக்கும் பணியையும் விராணி பூங்காவில்ரூ. 5 லட்சத்து 75 ஆயிரம் செலவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

3-வது வார்டுக்குட்பட்ட பிளசன்ட் நகரில் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் செலவில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியையும், 51-வது வார்டுக்குட்பட்ட கீழக்காட்டுவிளை, வடக்கு அஞ்சு குடியிருப்பு,கோவில் விளை பகுதிகளில் ரூ.25 லட்சம் செலவில் காங்கீரிட் தளம் அமைக்கும் பணியையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

25-வது வார்டுக்குட்பட்ட அவ்வை சண்முகம் சாலை முதல் குறுக்கு தெரு வரை ரூ.4 லட்சத்து 50ஆயிரம் செலவில் காங்கிரீட்தளம் அமைக்கும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மண்டல தலைவர் முத்துராமன், கவுன்சிலர்கள் தங்க ராஜா, அக்சயா கண்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News