உள்ளூர் செய்திகள்

முல்லைபெரியாறு அணை (கோப்பு படம்)

சாரல் மழையால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Published On 2023-03-25 08:06 GMT   |   Update On 2023-03-25 08:06 GMT
  • கடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
  • கேரளாவில் பெய்த மழையால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து 50 கனஅடியில் இருந்து 259 கனஅடியாக உயர்ந்துள்ளது.

கூடலூர்:

கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் தேனி, திண்டுக்கல் உள்பட மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்ப தாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி கடந்த சில நாட்க ளாக தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கேரளாவில் பெய்த மழையால் முல்லை பெரி யாறு அணைக்கு நீர்வரத்து 50 கனஅடியில் இருந்து 259 கனஅடியாக உயர்ந்துள்ளது. 256 கனஅடிநீர் திறக்கப்படு கிறது. அணையின் நீர்மட்டம் 116.90 அடியாக உள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் 53.94 அடியாக உள்ளது. 106 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.05 அடியாக உள்ளது. நீர்வரத்தும், திறப்பும் இல்லை.

சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 43.29 அடியாக உள்ளது. 12 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 14.6, தேக்கடி 1.4, கூடலூர் 1.2, சண்முகா நதி 2, போடி 1.4, சோத்து ப்பாறை 1.6, பெரியகுளம் 2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News