உள்ளூர் செய்திகள்
கனகமுட்லு கிராமத்தில் மாரியம்மன், விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
- கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
- அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே கனகமுட்லு கிராமத்தில், மகா கணபதி, சன்யாசி மாரியம்மன், மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த 9&ந் தேதி மாலை கணபதி பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை, கொடி ஏற்றுதல், காப்பு கட்டுதல், தீபாராதனை ஆகியவை நடந்தன.
10-ந் தேதி மாலை யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜை நடந்தன. நேற்று காலை 2-ம் கால யாக பூஜை, கடம்புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாரியம்மன், சன்யாசி மாரியம்மன், மகா கணபதி கோவில் கோபுரத்திற்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை, தீர்த்தப்பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.