உள்ளூர் செய்திகள்
பரதநாட்டிய மாணவிகளின் நடனமாடினர்.
மயிலாடுதுறையில், பரதநாட்டிய சலங்கை பூஜை விழா
- பரதநாட்டிய மாணவிகள் புஷ்பாஞ்சலி, காவடி சிந்து உள்ளிட்ட நடனமாடினர்.
- ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறையில் மயிலை சப்தஸ்வரங்கள் சார்பில் பரதநாட்டிய சலங்கை பூஜை விழா நடைபெற்றது. இவ்விழாவில் 10க்கும் மேற்பட்ட மாணவிகளின் அரங்கேற்றம் நடைபெற்றது. இதில் ராகமாலிகா, சண்முகப்பிரியா, நாட்டை, ஆனந்தபைரவி உள்ளிட்ட ராகங்களில் பரதநாட்டிய மாணவிகள் நிகழ்த்திய புஷ்பாஞ்சலி, காவடி சிந்து, தில்லானா உள்ளிட்ட நடனங்கள் பார்வை யாளர்களை வெகுவாக கவர்ந்தது.
இதில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் இளையபெ ருமாள், ஒன்றிய குழுத் தலைவர் காமாட்சி மூர்த்தி, உள்ளிட்ட ஏராளமான பார்வை யாளர்கள் கலந்து கொண்டு பரதநாட்டியத்தை கண்டு ரசித்தனர்.