உள்ளூர் செய்திகள்

கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் தலைமையில் நடந்தது.

கிருஷ்ணகிரியில் மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டம்

Published On 2022-07-08 15:31 IST   |   Update On 2022-07-08 15:31:00 IST
  • மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் தலைமை தாங்கினார்.
  • மாவட்ட கலெக்டர் நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட பணிக்கு இறுதி பட்டியல் வழங்கமைக்கு மன்ற அங்கீகாரம்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி மன்ற கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நகராட்சி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி மாநில நிதி குழு மாநில திட்டத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் முடிவுற்று முடிவு பட்டியல் வர பெற்றமைக்கு நிதி விடுவிக்கப்பட்டமைக்கு மன்றத்தின் அங்கீகாரம் கோருதல், மாநில நிதி குழு மானியம் கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி 2019-2020 ஆண்டுக்கான சிறு பாசன ஏரிகள் குளங்கள், ஊரணிகள் ஆகியவைகளை புனரமைக்கும் சிறப்பு திட்டம் மாவட்ட கலெக்டர் நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட பணிக்கு இறுதி பட்டியல் வழங்கமைக்கு மன்ற அங்கீகாரம்.

மேலும் கழிவுநீர் கால்வாய் அமைத்தால், ஆழ்துளை கிணறு அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கு மன்றத்தின் அங்கீகாரம் கோருதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News