உள்ளூர் செய்திகள்

ஓசூர் சிப்காட் பகுதியில் காரில் கடத்தப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

Published On 2022-11-01 08:56 GMT   |   Update On 2022-11-01 08:56 GMT
  • அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
  • காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 165 கிலோ இருந்தது.ரூ.60,000 மதிப்பிலான அவற்றை காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி,

ஓசூர் ஜூஜூவாடி சோதனை சாவடி அருகே சிப்காட் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த காரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 165 கிலோ இருந்தது.ரூ.60,000 மதிப்பிலான அவற்றை காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

புகையிலை பொருட்களை பெங்களூ ருவிலிருந்து தென்காசிக்கு கடத்தி சென்ற தென்காசியை சேர்ந்த முத்துகிருஷ்ணபாண்டியன் (வயது 29),சிவா (24) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

Similar News